சென்னை:
ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்காக ஸ்ரீ சத்குரு வாஸ்து நிறுவனர் மற்றும் சுபவாஸ்து கர்த்தா திரு. தங்கதுரை அய்யா அவர்கள் வாஸ்து சாஸ்திரம் குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, யூடியூப் பார்த்து வீடு கட்டுவது சரியா, கொத்தனார் வாஸ்துக்கும் நிபுணர் வாஸ்துக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.
யூடியூப் பார்த்து வீடு கட்டலாமா? தங்கதுரை அய்யாவின் பதில்:
"யூடியூப் பார்த்து எல்லாம் வீடு கட்டக்கூடாது. நாங்க யூடியூப்ல சொல்ற விஷயங்கள் எல்லாம் வாஸ்துல ஒரு சதவீதமான தகவல்கள் தான். முழுமையான ரகசியங்களை எந்த வாஸ்து நிபுணரும் சொல்வதில்லை," என்று தங்கதுரை அய்யா கூறினார். ஒரு கோடி ரூபாய் செலவு பண்ணி வீடு கட்டினாலும், வாஸ்துக்காக ஒரு சின்ன தொகையை செலவிடுவது அவசியம் என்றார்.
மனையடி சாஸ்திரம், கூழி பொருத்தம் - உண்மை என்ன?
மனையடி சாஸ்திரம், கூழி பொருத்தம், அளவுகள் போன்றவை சரியான பலன்களைக் கொடுக்குமா என்ற கேள்விக்கு, "பருந்து மனை, சிங்க மனை என்றெல்லாம் இருக்கிறது. பருந்து உயரத்தில் பறக்கும், இறையை அடித்துவிட்டுப் போகும். அது சிறப்பான வாழ்க்கை முறை இல்லை. சிங்க மனை என்றால், ஆண் வேலைக்கு போகாமல் பெண் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீங்க" என்றார்.
வடகிழக்கு திசை பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
வடகிழக்கு திசை பாதிக்கப்பட்ட வீடுகளில் உயிரிழப்புகள், பிரிவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே டைவர்ஸ் வரை கொண்டு செல்லும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இதற்கு தெய்வ வழிபாடு மட்டுமே தீர்வு என்றார்.
பூர்வீக சொத்தின் முக்கியத்துவம்:
பூர்வீக சொத்து சரியில்லாமல் இருந்தால், நீங்க அமெரிக்கா, லண்டன் எங்க போய் வீடு வாங்கினாலும் நல்ல வாஸ்து அமையாது. பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, பூர்வீகத்தை முதலில் சரி செய்ய வேண்டும் என்றார்.
எந்த கோவிலுக்கு போகலாம்?
வடகிழக்கு பாதிக்கப்பட்டவர்கள் நரசிம்மர் கோயிலுக்கு செல்லலாம். திண்டுக்கல் மலைக்கோட்டை மேற்கு பகுதியில் உள்ள ஓதசாமி கோயிலுக்கு பௌர்ணமி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வது நல்லது.
பக்கத்து வீட்டு வாஸ்து:
பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்து வீடு கட்டுவது தவறு. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு வாஸ்து அமைப்பு மாறும். தென்மேற்கு திசையில் வீடு கட்டினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வடகிழக்கில் கட்டினால் கடனாளியாகும் சூழ்நிலை ஏற்படும்.
தங்கதுரை அய்யா அவர்கள், வாஸ்துவைப் பொறுத்தவரை சரியான நிபுணரை அணுகுவதும், ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக ஆராய்ந்து செயல்படுவதும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.