பட்டாயா கடற்கரையில் காரின் மேல் கூரையில் ஏறி குடிபோதையில் ரகளை செய்த இந்தியர் .!

thumb_upLike
commentComments
shareShare

பட்டாயா கடற்கரையில் காரின் மேல் கூரையில் ஏறி குடிபோதையில் ரகளை செய்த இந்தியர் .!

நேற்று அதிகாலையில் தாய்லாந்து பட்டாயா நகரில் திதிசிரிகோன்பட் என்ற பெண் டாக்சி ஓட்டுனர் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு செல்வதற்காக தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரின் அருகே மோதுவது போல வந்து காரை நிறுத்தும்படி கூறினார் ஒருவர். அந்த நபர் தெளிவான மன நிலையில் இல்லாததால் அச்சமடைந்த திதிசிரிகோன்பட் காரை மேற்கொண்டு நகர்த்தாமல் நிறுத்தி விட்டு காரின் கதவை திறக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலாப் பயணி காருக்குள் ஏற முடியாததால் அந்த காரின் பேனட் வழியாக மேலே ஏறி காரின் மேற் பகுதியில் எறி உட்கார்ந்து கொண்டு ’இனி கீழே இறங்கமாட்டேன்.’ என்று ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட, வேடிக்கை பார்க்க பெரும் கூட்டமும் கூடி விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அல்திதிசிரிகோன்பட் காவல்துறை உதவியை நாட, பட்டாயா நகர காவல் துறையின் ரோந்து வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து காரின் மேற் கூரையில் படுத்தபடி உளறிக் கொண்டிருந்த அந்த சுற்றுலாப் பயணியிடம் கீழே இறங்குமாறு கோரினர். ஆனால் போதையில் இருந்த அந்த சுற்றுலாப்பயணி கீழே இறங்க மறுத்ததோடு ஆபாசமாக திட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால் அவரை குண்டுக்கட்டாக கீழே இழுத்து தள்ளிய காவலர்கள் அவரை கைது செய்து மருத்துவ சோதனைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் மேற்படி நபர் ஒரு இந்தியர் என்றும் பட்டாயாவில் முந்தினம் இரவில் அதிகமாக குடித்ததால் ஹேங் ஓவரில் இவாவாறு நடந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி தாய்லாந்து சோசியல் மீடியாவில் பரபரப்பாக வைரல் ஆன நிலையில் , தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்களுக்கு வழங்கப்படும் எளிய விசா நடைமுறைகளை கேலி செய்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close