உங்கள் ஜாதகம் ஒரு வெற்றி ஜாதகமா?🏆 கண்டுபிடிப்பது எப்படி? லக்னாதிபதி முதல் கர்ம பலன் வரை!

சென்னை: ஒவ்வொருவரின் ஜாதகமும், அதன் அமைப்பும் தனிப்பட்ட மனிதனின் வெற்றி, தோல்வி, செல்வம், குடும்பம் மற்றும் கர்ம பலன்களை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை சக்தி உபாஷகர் டாக்டர் ஓம் சக்திராஜ் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விரிவாகப் பேசினார். அவரது கருத்துக்களின் தொகுப்பு இதோ:

ஒரு ஜாதகம் வெற்றி பெறுவது எப்படி? லக்னாதிபதியின் முக்கியத்துவம்:

ஒரு ஜாதகத்தை பார்த்த மாத்திரத்தில் அதன் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிப்பதில் லக்னாதிபதியின் நிலை மிக முக்கியம். "லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று வலுவாக இருந்தால், அந்த ஜாதகன் எவ்வளவு பெரிய தடைகள், நிதி ஏற்றத்தாழ்வுகள், ஏன் அகல பாதாளத்தில் போனாலும் சரி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி பெறுவான்" என்கிறார் டாக்டர் ஓம் சக்திராஜ். லக்னாதிபதி 3, 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும்.

லக்னத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கையில், ராசி என்பது வெளியுலகிற்குத் தெரியும் சந்திரனின் சஞ்சாரத்தை (மனோகாரகன்) குறிக்கிறது. ஆனால் லக்னம் என்பது லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் ரகசியமான ஆத்மபலம், உயிர் சக்தியைப் போன்றது. இது ஒரு மனிதனின் வெற்றியை, அவன் எப்போது, எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மிக ரகசியமான அம்சம்.

தசா புத்திகளும் வாழ்க்கையின் திருப்பங்களும்:

ஒரு தசா (எ.கா: 16 அல்லது 18 ஆண்டுகள்) ஒரு ஜாதகருக்கு நடந்தால், அந்த காலம் முழுவதும் வெற்றி கிடையாது. அந்த தசை முழுவதுமே அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும். இதில் கோச்சார சந்திரன் போன்ற நுணுக்கமான கணிப்புகள் குறிப்பிட்ட "நொடிப் பொழுதை" தீர்மானிக்கும். அந்த ஒரு செகண்ட்தான் ஒருவருக்கு ஆக்சிடென்ட் நடக்கலாம், லாட்டரி விழலாம். அந்த நொடிப் பொழுது எப்போது வரும் என்பதை ஜாதக ரீதியாக 100% கணிக்க முடியும்.

ஒரு ஜாதகருக்கு உச்ச தசை நடக்கும்போது கூட அவர் கஷ்டப்படலாம். அதேபோல, நீச தசை நடப்பவர் கோடீஸ்வரனாகலாம். "நீச்சனை நீசன் பார்க்கிறான்" என்ற விதிப்படி, நீசம் பெற்ற கிரகம் அதற்கு வீடு கொடுத்த அதிபதி நீசமாகி, திரிகோண ஸ்தானங்களில் நீச கிரகங்கள் அமர்ந்தால், அவரை விட மகா கோடீஸ்வரன் எவனும் கிடையாது என்கிறார் டாக்டர் ஓம் சக்திராஜ். இதை மேலோட்டமாகப் பார்த்து நீச தசை நடந்தால் கஷ்டம் என சொல்லக் கூடாது.

பொருள் Vs குடும்பம்: கடவுளின் படைப்பு நீதி:

மனிதனுக்கு பொருள் பாக்கியம் மிக அதிகமாக கிடைத்தால், குடும்ப ரீதியான மகிழ்ச்சி சற்று குறைவாக இருக்கலாம். அதேபோல, குடும்ப ரீதியான சந்தோஷம் அதிகமாக இருந்தால், பொருள் தேடுவது அவனுடைய குறிக்கோளாக இருக்கும். "கடவுள் ஒன்று பொருளை கொடுத்துவிட்டு குடும்பத்தைக் கொடுக்க மாட்டார். குடும்பத்தை கொடுத்துவிட்டு பொருளை கொடுக்க மாட்டார்." இதுதான் இறைவன் படைப்பின் நீதி. இரண்டையும் சமநிலையில் வைத்து வாழ்பவர்கள் மிடில் கிளாஸ் மக்கள்.

கர்மாக்களின் தாக்கம்: தாத்தா சொத்து பேரனுக்கு!

"தாத்தா சொத்து பேரனுக்கு" என்ற பழமொழி வெறும் சொத்துக்களைக் குறிப்பதல்ல. தாத்தா பாட்டி செய்த புண்ணிய கர்மாக்களோ (நற்காரியங்கள்) அல்லது பாவ கர்மாக்களோ (தீய செயல்கள்) தான் பேரனை வந்தடையும் என்கிறார் டாக்டர் ஓம் சக்திராஜ்.

  • புண்ணிய கர்மா: ஒரு தாத்தா தனது வாழ்நாள் முழுவதும் தியாகங்கள் செய்து, தான தர்மங்கள் செய்து, வறுமையிலேயே வாழ்ந்திருந்தாலும், அவருடைய புண்ணிய கர்மாக்கள் அவருடைய பேரனை ராஜாவாகப் பிறக்கச் செய்யும். இப்படிப் பிறந்தவர்கள் திரிகோணத்தில் கிரகங்கள் (1, 5, 9) வலுவாக அமைந்து, பிறக்கும்போதே சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

  • பாவ கர்மா: ஒரு தாத்தா மற்றவர்களை ஏமாற்றி, அநீதியான முறையில் சொத்துக்களை சேர்த்திருந்தால், அந்த பாவ கர்மா பேரனை வந்தடையும். அந்தப் பேரன் எவ்வளவு சம்பாதித்தாலும், அனைத்தையும் இழந்து அழிந்து போவான்.

எனவே, ஒரு ஜாதகரின் லக்னாதிபதி வலுவாக இருப்பதும், கர்ம பலன்களும், தசா புத்தியின் நுணுக்கங்களும் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து, நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என டாக்டர் ஓம் சக்திராஜ் வலியுறுத்துகிறார்.Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles