எமனுக்கு கிடைத்த ஏமாற்றம்!

thumb_upLike
commentComments
shareShare

எமனுக்கு

இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள கம்பிரியாவைச் சேர்ந்த தாமஸ் பார்க்கர் கடந்த ஜனவரி 21 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக இந்தோனேஷியாவில் கைது செய்யப் பட்டார். மரணத் தண்டனையை எதிர்பார்த்திருந்த அவருக்கு இப்போது பத்துமாத சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.
மிக கடுமையான போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தைக் கடைபிடிக்கும் இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தும் குற்றம் சாட்டப் பட்டவர்களை தேவைப் பட்டால் சுட்டுக் கொல்லவும் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.
அப்படிப் பட்ட இந்தோனேஷியாவில் போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக, இந்த பிரிட்டிஷ் மனிதருக்கு, மரணத் தண்டனை அளிக்கப் படாமல், சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.
குட்டா கடற்கரை எனப்படும் பிரபலமான பாலி சுற்றுலா மையத்தில் ஒரு வில்லாவில் கைது செய்யப் பட்ட பார்க்கர், அதற்கு முன், கடற்கரையில் ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் இருந்து ஒரு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு “சந்தேககப் பட வைக்கும்” விதத்தில் நடந்து கொண்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப் படுகிறது.
ஆனால், பார்க்கர் போலீஸ் தன்னை நெருங்குகிறது என்று அறிந்ததுமே பயத்தில் அந்த பொட்டலத்தை எறிந்து விட்டு அங்கிருந்து ஓடி மறைந்ததாகவும் தெரிய வருகிறது.
அந்த 32 வயது எலக்ட்ரீஷியன் தான் அந்த பொட்டலத்தை ஆர்டர் செய்யவில்லை என்றும் அவரது நண்பரான நிக்கி என்னும் போதைப் பொருள் வியாபாரி அதை அவரிடம் அனுப்பி, யாரோ வந்து அதை விரைவில் வாங்கிக் கொள்வார் என்று செய்தி அனுப்பி இருந்ததாகவும் சொன்னார்.
போன மாதம் டென்பஸார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆரம்பமான வழக்கு விசாரணையில் பார்க்கர் தாம் அந்த பொட்டலத்தை வாங்க மறுத்ததாகவும், ஆனால், அதனால் எந்த ஆபத்தும் இல்லை; அது பாதுகாப்பானது என்று நிக்கி உறுதி கூறியதால் தான் அதை வாங்கியதாகவும் கூறினார்.
அந்த பொட்டலத்திற்கும், பார்க்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியான பின், போதைப் பொருள் கடத்தலுக்கான மரணத் தண்டனை குறைக்கப் பட்டு, அதிகாரிகளிடமிருந்து தகவல்களை மறைத்த குற்றத்திற்காக மட்டும் தண்டனை வழங்கப் பட்டது.
பார்க்கர் நடந்த சம்பவத்திற்காக வருந்துவதாலும், அவர் மீது இதுவரை எந்த புகார்களும் இல்லாததாலும் நீதிபதிகள் அவருக்கு பத்து மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினர்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close