வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி.. வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது?

thumb_upLike
commentComments
shareShare

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

இந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் வேலூரில் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வந்தாலும், தற்போது திமுகவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான போட்டி இருந்தாலும், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது போல் இந்த முறையும் வெற்றி. பெறுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் போன்ற வாக்குறுதிகளை கதிர் ஆனந்த் கொடுத்துள்ளதால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close