வரலாற்றில் இன்று மே 5

thumb_upLike
commentComments
shareShare

வரலாற்றில் இன்று மே 5

1813- ''இருத்தலியல் தத்துவத்தின்(Existentialist Philosophy) தந்தை'' என்றழைக்கப்படும் டென்மார்க்கைச் சேர்ந்த மத தத்துவ வாதி சோரன் கியர்கேகார்ட் பிறந்தார்.

1818- தத்துவ ஞானியும், பொருளாதார மேதையும், சோஷலிஸ புரட்சியாளரும், கம்யூனிஸக் கட்சி அறிக்கை” “மூலதனம்” ஆகிய நூல்களின் ஆசிரியருமான கார்ல்மாக்ஸ் ஜெர்மனியில், டிரியர் நகரில் பிறந்தார். ”

1821- நாடு கடத்தப் பட்டு, செயிண்ட் ஹெலினா தீவில் இருந்த ஃப்ரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் தமது 51ஆம் வயதில் இறந்தார்.

1916- பிரிட்டிஷ் படைகளின் ஆதரவுடன், முதலாம் உலகப் போரில் ஒட்டமன் பேரரசைக் கவிழ்த்து, மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கி, இன்றைய அரபுநாடுகளை வடிவமைத்த அரேபிய கலகம் தொடங்கியது.
1925- டென்னஸைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஜான் டி. ஸ்கோப்ஸ் என்பவர் டார்வினின் பரிணாமக் கொள்கையை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப் பட்டார்.

1945- ஓரிகனிலுள்ள கியர்ஹார்ட் மலையில் பிக்னிக் சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், ஐந்து குழந்தைகளும், ஜப்பானிய பலூன் குண்டு வெடித்து கொல்லப் பட்டனர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது நடந்த ஒரே கொலை தாக்குதல் இது தான்.
1981- அயர்லாந்து நாட்டில் குடியரசுப் படையைச் சேர்ந்த பாபி சாண்ட்ஸ் 27 ஆவது வயதில் வடக்கு அயர்லாந்தில் மேஸ் சிறையில் 66 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார்.
 

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close