மூன்று குழந்தைகளை தவிக்கவிட்ட தாயை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை!

thumb_upLike
commentComments
shareShare

undefined

 

7 வருடங்களில் 3 மூன்று குழந்தைகளை மூன்று கிலோமீட்டர் பரப்பிற்குள் பொது இடங்களில் கைவிட்டுச் சென்ற தாயை கிழக்கு லண்டன் காவல்துறை தேடி வருகிறது…நான்காவது குழந்தை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன்..!
கிழக்கு லண்டனில் இந்த மூன்று குழந்தைகளும் கிடைத்த பகுதியிலுள்ள சுமார் 400 வீடுகளில் தாயைத் தேடி வரும் காவல்துறை, அந்த பகுதி மக்களிடம் குழந்தைகளின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் உதவ முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மூன்று குழந்தைகள்- ஹாரி, ரோமன், எல்சா ஆகிய குழந்தைகள் முறையே 2017, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்கள் நடமாடும் பொது இடங்களில் காவல்துறையால் கண்டெடுக்கப் பட்டன. இந்த குழந்தைகளின் தாய் அந்த பகுதியை ஒட்டியுள்ள ஈஸ்ட் ஹாம், ப்ளெயிஸ்டோ போன்ற இடங்களிலிருந்து வந்து குழந்தைகளை இங்கு விட்டுச் சென்றிருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு.
ஒவ்வொரு குழந்தையும் சிசிடிவி கேமிரா வைக்கப் படாத இடங்களில் துணிகளில் பொதியப்பட்டு சாதாரண பைகளில் வைக்கப் பட்டிருந்ததாக காவல் துறை தெரிவிக்கிறது. 2024 ஆம் அண்டில் மூன்றாவது குழந்தை கிடைத்த பின், காவல்துறைக்கு நான்காவது குழந்தை இந்த ஆண்டில் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகிவிட்டது.
டி என் ஏ சோதனைக்குப் பின் மூன்று குழந்தைகளும் ஒரே தாயின் குழந்தைகள் என உறுதி படுத்தப் பட்ட நிலையில் தாயின் முழு டி என் ஏ ப்ரொஃபைலும் காவல்துறையின் கையில் உள்ளது. டி என் ப்ரொஃபைல், நூற்றுக்கணக்கான மணிநேர சிசிடிவி விடியோக்கள், மற்றும் 20 ஆயிரம் பவுண்ட் பரிசு என்ற அறிவிப்பு எதுவுமே அந்த தாயை கண்டுபிடிக்க உதவாத நிலையில் உள்ளன.
மூத்த காவல் அதிகாரியான ஹம் இது பற்றிக் கூறுகையில்,” என்னுடைய நீண்ட நாள் அனுபவத்தில் நான் யூகிப்பது என்னவென்றால், இந்த குழந்தைகளின் தாய் ஏதோ ஆபத்தான சூழலில் தன்னை வெளிக்காட்டாத முடியாத நிர்பந்தமான நிலைமையில் இருக்கிறார். குறைந்த பட்ச தகவல் கிடைத்தாலும், நாங்கள் அவருக்கு எல்லாவகையிலும் உதவ தயாராக இருக்கிறோம்” என்றார். புலனாய்வுத் துறை அதிகாரியான நோயல் மக்ஹக்,” இந்த குழந்தைகள் விடப்பட்டிருந்த சூழலைப் பார்க்கும் போது, இவர்கள் உயிர்பிழைத்திருப்பதே ஒரு அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.
ரோமன், ஹாரி என்ற மூத்த இரு குழந்தைகளும் தத்து கொடுக்கப் பட்ட நிலையில், ஒரு வயது நிரம்பிய எல்சா மட்டும் பிறப்புச் சான்றிதழ் கூட பெற முடியாத நிலையில், தன் தாய்க்காகக் காத்திருக்கிறாள்.
 

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close