மீன ராசிக்கு கலவையான காலம் - எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

மீன ராசிக்கு கலவையான காலம் - எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், மீன ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஆண்டு ஜென்ம சனி தொடங்க இருப்பதால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மீன ராசி காரர்கள் தங்கள் எண்ணங்களில் மாற்றம் அடைய வேண்டியது அவசியம் என்கிறார் ஜோதிடர். யாரையும் blindly நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புகழ்ச்சியில் மயங்கி விடாமல் இருப்பதும் முக்கியம். பொதுவாக நல்லவர்களாக இருக்கும் மீன ராசி காரர்களுக்கு இந்த காலத்தில் கெட்ட பழக்க வழக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி.

விரய செலவுகள் அதிகரிக்கும் என்பதால், பண விஷயத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் ஈடுபடுவது தற்போது தவிர்க்க வேண்டியது நல்லது. ஏனென்றால், காதல் தோல்வியில் முடியும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த ஆண்டு கடினமான காலம் வர இருப்பதால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மீன ராசி காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற

பெயர் கெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்கிறார் ஜோதிடர். தாய், தந்தையரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்ல பலனைத் தரும்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

Aanmeega Glitz Whatsapp Channel

Trending Articles