விராத்-அனுஷ்காவுக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

thumb_upLike
commentComments
shareShare

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா தம்பதிக்கு விலை மதிப்பில்லா பொக்கிஷம் கிடைத்துள்ளததை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என்ற பெயரிட்ட நிலையில் சமீபத்தில் வாமிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும் தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு அகாய் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறிய போது ’மிகுந்த மகிழ்ச்சி மற்றும் அன்பினால் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ரசிகர்களாகிய உங்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வாமிகாவின் குட்டி தம்பிக்கு அகாய் என்ற பெயர் இட்டுள்ளோம். இந்த அழகான நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷத்திற்கு உங்கள் ஆசியையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்’ என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து விராத் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close